அரியலூர் மாவட்டம் வங்காரம் காலனித்தெருவில் உள்ள வேகத்தடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரனிடம், சமூக ஆர்வலர் சோழன்குடி கணேசன் திங்கள்கிழமை மனு அளித்தார்.
அவர் அளித்த மனு:
அரியலூர் மாவட்டம் வங்காரம் காலனியிலிருந்து ஊர் தெரு வரை 10 மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பேருந்தில் பயணம் செய்வோரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே 2 வேகத்தடைகளை தவிர மற்ற அனைத்து வேகத்தடைகளையும் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்றொரு மனு: செந்துறையிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் அரியலூர் இருசு குட்டை வழியாக வந்தால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்ல மிகவும் வசதியாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.