3 கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஸ்ரீபுரந்தான்(வ), அணைக்குடம், ஆண்டிமடம் வட்டம் இலையூர் (கி) ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) அம்மா திட்ட முகாம்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஸ்ரீபுரந்தான்(வ), அணைக்குடம், ஆண்டிமடம் வட்டம் இலையூர் (கி) ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்,
பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும்.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com