அரியலூர் அருகே இளம்பெண்ணிடம் ஆபாசமாகப் பேசிய கிராம நிர்வாக அலுவலர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
செந்துறை அருகேயுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவர் திருஞானம். இவர் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செல்லிடப்பேசிக்கு தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசியுள்ளார்.
அவர் பேசிய அந்தப் பதிவு தற்போது கட்செவி அஞ்சலில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்த விசாரித்த உடையார்பாளையம் கோட்டாட்சியர் டீனாகுமாரி, திருஞானத்தை தாற்காலிக பணி நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டார்.