உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் சங்க கூட்டம் ஜயங்கொண்டத்தில் அண்மையில் நடைபெற்றது. வட்ட தலைவர் சிவசிதம்பரம் தலைமை வகித்தார். சுந்தரராசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுந்தரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், பாரத ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச வைப்பு தொகையாக பென்சனர்களுக்கு ரூ.1,000 ஆகவும், குடும்ப பென்சனர்களுக்கு ரூ.500 ஆகவும் ரிசர்வ் வங்கி அறிவிக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் பணிநிறைவு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியத்தை விரைந்து வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச பென்சன் தொகையை ரூ.3,500ஆக மாற்றி வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.