அரியலூர் மாவட்டத்தில் காட்டகரம் (வ), காட்டாத்தூர் (தெ), ஆத்துக்குறிச்சி, கண்டிராதித்தம்,தேளூர் ஆகிய 5 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (மே 19) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. வட்டாட்சியர் தலைமையில் முகாமில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் கோரி மனு அளித்து உடனடியாக தீர்வு காணலாம் என ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.