10-ம் வகுப்பு தேர்வு முடிவு: அரியலூர்   மாவட்டம் 93.33% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், அரியலூர் மாவட்டத்தில் 93.33 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.81 சதவீதம் அதிகம்.

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், அரியலூர் மாவட்டத்தில் 93.33 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.81 சதவீதம் அதிகம்.
அரியலூர் மாவட்டத்தில், 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை 164 பள்ளிகளில் இருந்து 11,241 மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களில் 10,491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.33% தேர்ச்சியாகும். கடந்த ஆண்டை விட 0.81 சதவீதம் அதிகரித்து, மாநில அளவில் தேர்ச்சி வரிசையில் 24 இடத்தில் உள்ளது. கடந்தாண்டு 92.52 சதவீதம் பெற்று, தேர்ச்சி வரிசையில் 25 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் அறிவிப்புப் பலகைகளில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் ஒட்டப்பட்டன. அரியலூர் மாவட்ட நூலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் ஒட்டப்பட்டிருந்தன.
மேலும், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது செல்லிடப்பேசி மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொண்டனர்.
100% தேர்ச்சி: கடந்த ஆண்டு 24 அரசுப் பள்ளிகள் மட்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. இந்தாண்டு 26 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 6 உதவிபெறும் பள்ளிகள், 12 சுயநிதிப் பள்ளிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பாடவாரியாக சதம் பெற்றவர்கள்: அரியலூர் மாவட்டத்தில் 227 பேர் பாடவாரியாக 100-க்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கணிதம் பாடத்தில் 71 பேரும், அறிவியியல் பாடத்தில் 71 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 85 பேரும் 100-க்கு 100 பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com