பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டண நிலுவைத் வசூல் என்ற பெயரில் கேபிள் ஆபரேட்டர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அரசு கேபிள் நிறுவனத்தில் கட்டமைப்புகளை ஏற்படுத்தி ஆபரேட்டர்களுக்கு நேரடியாக இணைப்பு வழங்கப்பட வேண்டும். தட வாடகை ரத்து செய்ய வேண்டும். கேபிள் ஆபரேட்டர்களுக்கு நல வாரியம்,தொழில் பாதுகாப்புக்கான காப்பீடு,வங்கிக் கடன் உதவிகளை செய்துதர வேண்டும்.
பணியின் போது உயிரிழந்த கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.