அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்திலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2017-18 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்திலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2017-18 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது: விண்ணப்பங்களை w‌w‌w.‌s‌k‌i‌l‌l‌t‌r​a‌i‌n‌i‌n‌g.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​   என்ற இணையதளம் மூலம் அனுப்ப வேண்டும்.
ஆண்டிமடம் அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்றுவிக்கப்படும் பிரிவுகள்:
மின்சாரப் பணிகள், பொருத்துநர், கம்மியர் மோட்டார் வண்டி, கம்மியர் மின்னணு இயந்திரவியல் ஆகிய இரண்டாண்டு பயிற்சி பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், பற்றவைப்பாளர் ஓராண்டு பிரிவுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியும், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் ஓராண்டு பிரிவுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com