அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல், மாறுதல் கலந்தாய்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. ஒளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மே 29-ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும், மே 30-ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வும், மே 31-இல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும், ஜூன் 1 இல் இடைநிலை மற்றும் உடற்கல்வி சிறப்பு ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறுகிறது.
இதர ஆசிரியர்களுக்கான மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு வழக்கம்போல ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியில் நடைபெறும்.