பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நாட்களில் மாற்றம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல், மாறுதல் கலந்தாய்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல், மாறுதல் கலந்தாய்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. ஒளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மே 29-ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும், மே 30-ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வும், மே 31-இல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும், ஜூன் 1 இல் இடைநிலை மற்றும் உடற்கல்வி சிறப்பு ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறுகிறது.
இதர ஆசிரியர்களுக்கான மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு வழக்கம்போல ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com