அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வியாழக்கிழமை சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.
செந்துறை அருகேயுள்ள ராயம்புரம் பகுதியைச் சேர்ந்தவர் நதியா. இவர் தனது இரு சக்கர வாகனத்தை கீழராயம்புரம் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத 3 பேர், நதியாவின் இரு சக்கர வாகனத்தைத் திருடிச் சென்றனர்.இது குறித்து செந்துறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.