அரியலூர் மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் குழந்தைகள் நன்னடத்தை அலுவலர் பணிக்குத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு இயங்கி வரும் அரியலூர் மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் காலியாக உள்ள நன்னடத்தை அலுவலர் பணிக்கு ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.21,000 ஊதியம் வழங்கப்படும்.
பி.எல்., எல்.எல்.பி.யை கல்லூரியில்படித்து முடித்து, சட்டப்பணியில் ஓராண்டுகாலம் அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். நன்னடைத்த அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர் 40 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் மற்றும் விளக்கக் குறிப்புகளை மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2 வது தளம், அரசு பல்துறை வளாகம், ஜயங்கொண்டம் சாலை, அரியலூர் - 621704 என்ற முகவரியில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் 17 ஆம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329-224210 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.