திருமானூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம்  திருமானூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம்  திருமானூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயப் பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மேலும் தில்லியில் வரும் 20 ஆம் தேதி நடைபெறும் விவசாயிகள் பேரணி, 21, 22 ஆகிய தேதிகளில் விவசாயிகள் நடத்த உள்ள விவசாயிகள் பாராளுமன்றம் குறித்தும் ஆர்ப்பாட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் சேவை இயக்கத்தின் அகில இந்திய தலைவர் தங்க.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com