நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

ஜயங்கொண்டம் வட்டார விவசாயிகள் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் காசிநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

ஜயங்கொண்டம் வட்டார விவசாயிகள் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் காசிநாதன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜயங்கொண்டம் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய இம்மாதம் 30  ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்  கூட்டுறவு சங்கம், பொது சேவை மையம் ஆகியவற்றில் ஏக்கருக்கு ரூ. 402 பிரிமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். ஜயங்கொண்டம் வட்டாரத்துக்குள்பட்ட விவசாயிகள் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு வட்டார உதவி வேளாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com