அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே பெண்ணைக் காதலித்து திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவரை மகளிர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள இரும்புலிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சத்தியநாதன் மகன் அன்பு (19). இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் 19 வயதுள்ள கல்லூரி மாணவி ஒருவருடன் கடந்த 4 வருடங்களாக பழகி வந்துள்ளார்.
தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக அப்பெண் அளித்த புகாரின் பேரில் ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து அன்புவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.