தா.பழூர் அருகே விஷம் குடித்த விவசாயி சாவு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
தா.பழூர் அருகிலுள்ள கீழசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(50).விவசாயியான இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அண்மையில் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ராஜேந்திரன் மனைவி கோபித்துக்கொண்டு கேரளாவில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
 இதனால் விரக்தியடைந்த ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை விஷத்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். இது குறித்து தா.பழூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com