அரியலூர் அருகே பேருந்து மோதி இளைஞர் சாவு

அரியலூர் அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்தார்.

அரியலூர் அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்தார்.
அரியலூர் புதுமார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிபிரகாஷ்(22). பிஇ பட்டதாரியான இவர் அரசு சிமென்ட் ஆலையில் பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை காலை இவர் தனது நண்பர் பிரபுவுடன் (22) இருசக்கர வாகனத்தில் அரியலூர் மின்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அரியலூர் பேருந்து நிலையம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதி ஜோதிபிரகாஷ்  உயிரிழந்தார். 
லேசான காயமடைந்த பிரபு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அரியலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com