ஓய்வு பெற்றவேளாண் அலுவலர் வீட்டில் திருட்டு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் ஓய்வுப் பெற்ற வேளாண் அலுவலர் வீட்டில் 5 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம்  திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் ஓய்வுப் பெற்ற வேளாண் அலுவலர் வீட்டில் 5 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம்  திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (61), ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர். இவர் செவ்வாய்க்கிழமை இரவு  தூங்கிவிட்டு புதன்கிழமை காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com