ஓலையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் ஓலையூர், பெரியாத்துகுறிச்சி, விழுதுடையான் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஆண்டிமடம் உதவி செயற்பொறியாளர் ஆர்.சாந்தி வெளியிட்டு செய்திக்குறிப்பில் இதைத் தெரிவித்தார்.