அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ளவானாநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் ஒருவர் காயமடைந்தார்.
தா.பழூர் அருகே உள்ள வேனநல்லூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 500 காளைகள் பங்கேற்றன.
இவை அனைத்தும் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 150 மாடுபிடி வீரர்கள் இதில் கலந்து கொண்டு வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை பிடிக்க முயன்றனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்கம், வெள்ளிக் காசுகள், நாற்காலி, கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில் மாடு முட்டியதில் கோட்டியால் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (60) காயமடைந்தார்.