ஓடையில் மணல் அள்ளிய 2 பேர் கைது; 2 வாகனங்கள் பறிமுதல்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 வாகனங்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு வாகனங்களின் உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 வாகனங்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு வாகனங்களின் உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமானூர் அருகே வாரணவாசி மல்லூர் கிராமத்திலுள்ள ஓடையில் இருந்து வியாழக்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் மற்றும் மினிலோடு ஆட்டோவை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கீழப்பழுவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அமரஜோதி பறிமுதல் செய்தார். மேலும், டிராக்டர் உரிமையாளர் மேலகருப்பூர் செந்தில் (27), சுமை ஆட்டோ உரிமையாளர் அரியலூர் தெற்குத்தெரு பிரபாகரன் (26) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com