அவசர கால ஊர்தி (108) மற்றும் ஏகம் அறக்கட்டளை சார்பில் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு விபத்து மற்றும் அவசர கால முதலுதவிப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு அன்னை தெரசா நர்சிங் கல்லூரி தாளாளர் த. முத்துகுமரன் தலைமை வகித்தார். மருத்துவ உதவியாளர் சுமித்ராதேவி, ஏகம் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் மற்றும் பைலட் சத்தியராஜ் ஆகியோர் மாணவிகளுக்கு ஆபத்து மற்றும் அவசர கால முதலுதவி பயிற்சியளித்தனர்.
பயிற்சியில்அன்னைதெரசா கல்வி நிறுவன செயலாளர் வேல்முருகன், இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக அன்னை தெரசா நர்சிங் கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்றார். மெட்ரிக் பள்ளி முதல்வர் தனலட்சுமி நன்றி கூறினார்.