அரியலூர் மாவட்டம் தா. பழூரை அடுத்த கோடாலி கிராமத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, நீர்வடிபகுதி தன்னார்வ அமைப்பு மற்றும் மகளிர் குழுக்கள் சார்பில் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சமூகவியலர் ராமலிங்கம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
உதயநத்தம் விஏஓ சுந்தரம் தூய்மை இந்தியா குறித்து பேசினார்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு நிறைந்த இறைச்சிகளைத் தவிர்த்து கீரை, காய்கறிகள், பழவகைகளை அதிகம் பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.