பெரியதிருகோணத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டம், பெரியதிருகோணம் அரசு மேல்நிலைப் பள்ளி, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் வியாழக்கிழமை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

அரியலூர் மாவட்டம், பெரியதிருகோணம் அரசு மேல்நிலைப் பள்ளி, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் வியாழக்கிழமை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்து பேசினார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் அ. சுதாகர் முன்னிலை வகித்தார். பேரணியானது பெரியதிருக்கோணம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் பள்ளி மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளகிருஷ்ணாபுரத்தில்...
 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,பசுமைப் படை மாணவர்கள்,வீடு விடாகச் சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும்,மேலும் தெருக்களில் குவிந்து கிடந்த குப்பைகள்,பிளாஸ்டிக் பைகள்,பாட்டில்கள்,தேங்காய் ஓடுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com