அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

அரியலூர் மாவட்டம், பள்ளகிருஷ்ணாபுரம், இடையத்தான்குடி, கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், பள்ளகிருஷ்ணாபுரம், இடையத்தான்குடி, கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இடையத்தான்குடி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியை த. ஹேமலதா தொடக்கி வைத்தார். கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் ரா. சாமிநாதன் செய்திருந்தார்.
கல்லக்குடி...: கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அனந்தநாராயணன் தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
மாணவர்கள், உள்ளூரில் கிடைக்கக்கூடிய வளங்களில் இருந்து செயல்திட்டங்களை வடிவமைத்திருந்தனர். விபத்தைத் தடுக்கும் தானே ஒளிரும் தெருவிளக்கு, பன்முக எதிரொலி, பசுமை இல்லம் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியை வேதா வரவேற்றார்.
பள்ளகிருஷ்ணாபுரம்...: பள்ளகிருஷ்ணாபுரம் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியை பள்ளித் தலைமை ஆசிரியை மங்கையர்கரசி தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அனந்தநாராயணன் பங்கேற்று மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com