பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகம் முன் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 220 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆட்சியரக அலுவலகம் முன்பு 3 ஆவது நாளாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அரியலூர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உட்பட 220 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
போராட்டத்தில், வருவாய், உள்ளாட்சி, சத்துணவு, சாலைப் பணியாளர்கள், கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.