அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே திருவெங்கனூர் அருள்மிகு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக 14 ஆம் தேதி புனிதநீர் எடுத்துவரப்பட்டு, அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால பூஜை நடைபெற்று, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கோயில் கலசங்களில் சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினர். பிறகு மூலவருக்கு சிறப்பு தீபாதாரனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.