அதிமுகவை குடும்பச் சொத்தாக மாற்ற ஒரு சிலர் முயற்சி செய்கிறார்கள் என்றார் அரசு தலைமை கொறடா தாமரை. எஸ். ராஜேந்திரன்.
அரியலூர் மாவட்டம், சுத்தமல்லியில் அதிமுக அம்மா, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணிகள் சார்பில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: கட்சியில் உள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் களையப்படும். கட்சிக்குள் உள்ள பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும். அ.தி.மு.க, தொடர்ந்து மக்கள் பணியாற்றும்.
அ.தி.மு.க-வை குடும்பச் சொத்தாக மாற்ற ஒரு சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது' என்றார் அவர். ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ.ராமஜெயலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று பேசினர்.