தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அரியலூர் கோட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை (ஏப்.17) காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் - கல்லூரி சாலையிலுள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. மேற்பார்வை பொறியாளர் மற்றும் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட அலுவலர்கள் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலமாகத் தெரிவித்து பயனடையலாம் என செயற்பொறியாளர் செல்வராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.