காவிரி மேலாண்மை வாரியம் கோரி  உடையார்பாளையத்தில் திமுகவினர் ஆர்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக தெற்கு ஒன்றியச் செயலர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியினர், மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். 
பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். 
இதேபோல் துலாராங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com