காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அரியலூர் அண்ணா சிலை அருகே மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறை அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், குடிநீர்ப் பிரச்னையை தீர்த்திடவும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் கொளஞ்சிநாதன் தலைமை வகித்தார்.அரியலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.