பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர்,தங்களது பணிகளை பணிகளை 2 ஆவது நாளாக புறக்கணித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் 21 மாத நிலுவையை வழங்க வேண்டும். அனைத்துப் பிரிவு ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்களை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.