அரியலூரில் 2 ஆவது நாளாக போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர்,தங்களது பணிகளை பணிகளை 2 ஆவது நாளாக புறக்கணித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் 21 மாத நிலுவையை வழங்க வேண்டும். அனைத்துப் பிரிவு ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்களை களைய வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.  தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com