அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 8 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸார் வழக்க்ம்போல் சோதனையிஸல் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மது விற்ற உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் செல்வமணி (59), சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து மகன் நாகராஜ் (74), சாமிநாதன் (61), ஆதிச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் பூபதி(55), மணகெதி கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் துரைசாமி(43), தங்கையன் மகன் துரைராஜ் (30), உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து மகன் சின்னமணி(55), நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சேர்ந்த கட்டாறு மகன் சின்னசாமி(70) ஆகிய 8 பேரைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.