பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

அரியலூரில் ரோலர் ஸ்கேட்டிங் ரோல்பால் அசோசியேஷன் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூரில் ரோலர் ஸ்கேட்டிங் ரோல்பால் அசோசியேஷன் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட் வருவாய் அலுவலர் சே. தனசேகரன் கொடியசைத்து தொடக்கிவைத்தார். பேரணியானது மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி, செந்துறை சாலை,பேருந்து நிலையம், தேரடி, சத்திரம், மார்க்கெட் தெரு, கல்லூரிச் சாலை வழியாகச் சென்று மீண்டும் விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது.
பேரணியின்போது, பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை தவிர்க்க துணிப்பை எடுத்துச் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட  கருத்துகளை ரோலர் ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள் வலியுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com