உடையார்பாளையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.


அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடையார்பாளையத்தில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகை, சனிக்கிழமை காலை கிழிக்கப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சனிக்கிழமை காலை உடையார்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பதாகையைக் கிழித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உடையார்பாளையம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியலைக் கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com