டிச.12, 20 தேதிகளில் தொழிலாளர் வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

அரியலூர் மாவட்டத்தில் டிசம்பர் 12,20 தேதிகளில் தொழிலாளர் வாரியத்துக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.


அரியலூர் மாவட்டத்தில் டிசம்பர் 12,20 தேதிகளில் தொழிலாளர் வாரியத்துக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் ஊராட்சிக் கூட்டரங்கில் டிசம்பர் 12, சுத்தமல்லி கிராம சேவை மையத்தில்20 ஆம் தேதியும் அமைப்புசாராத் தொழிலாளர் வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. பதிவு விண்ணப்பங்கள், புதுப்பித்தல் விண்ணப்பங்கள் மற்றும் நல உதவி கேட்பு மனுக்கள் முகாமில் பெற்றுக் கொள்ளப்படும்.
கடைகள், நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தெருசுமை வியாபாரிகள், தையல் கலைஞர்கள் உள்பட 60 வகையான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், கட்டுமானம் உள்பட 38 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும் உறுப்பினர்களாக சேரலாம். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சான்றொப்பமிடப்பட்ட குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, வயதுச் சான்று,வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், மூன்று போட்டோ, செய்யும் வேலைக்கான உரிய பதிவு விண்ணப்பத்தில் பெறப்பட்ட தேதியுடன் வி.ஏ.ஓ கையொப்பம், வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் முகாமில் நேரில் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com