சோனியாகாந்தி பிறந்த நாளில் நலத் திட்ட உதவி

நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியகாந்தி பிறந்த தினத்தை அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர்

நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியகாந்தி பிறந்த தினத்தை அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.
கட்சியின் அரியலூர் நகரத் தலைவர் சந்திரசேகர் தலைமையில் செட்டி ஏரிக்கரையிலுள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பின்னர் காமராஜர் சிலை அருகே கட்சிக் கொடியை மூத்த காங்கிரஸ் தலைவர் சீனி. பாலகிருஷ்ணன் ஏற்றினார். தொடர்ந்து அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். விழாவில் அக்கட்சியின் மாவட்ட துணை தலைவர் திருஞானசம்பந்தம், மாவட்டச் செயலர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் அக் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு, அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலர் டி. பால்ராஜ் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் கே. கிருஷ்ணமூர்த்தி, வி. சின்ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் டி. தமிழ்ச்செல்வன், கட்சிக் கொடியேற்றி, நலத்திட்ட உதவி வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில், ஏழை, எளிய மாணவர்களுக்கு பென்சில், பேனா, நோட்டு உள்ளிட்ட எழுதுபொருள்களும், பொதுமக்களுக்கு மரக்கன்று, பூச்சி மருந்து தெளிக்கும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மூக்கன், பெரம்பலூர் தொகுதி ஊடக பிரிவுத் தலைவர் செந்தில்பிரசாத், மாவட்ட துணைப் பொதுச்செயலர் துரை. ராமச்சந்திரன், வட்டாரத் தலைவர்கள் செந்தில், காமராஜ், ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கிராம கமிட்டி துணைத் தலைவர் எஸ். சுரேஷ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com