கூரை வீடு தீக்கிரை

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே வாரணவாசியில் புதன்கிழமை ஏற்பட்ட  தீ விபத்தில் கூரை வீடு எரிந்து முற்றிலும் நாசமானது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே வாரணவாசியில் புதன்கிழமை ஏற்பட்ட  தீ விபத்தில் கூரை வீடு எரிந்து முற்றிலும் நாசமானது.
திருமானூர் அருகேயுள்ள வாரணவாசி நடுத்தெருவில் வசித்து வருபவர் பெரியநாயகி(70). இவருடன் அவரது மகள் அமிர்தம் (50) என்பவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். புதன்கிழமை காலை வீட்டிலுள்ள அனைவரும் வேலைக்குச் சென்று விட்டனர்.  அப்போது சமையல் அடுப்பில் இருந்த தீ பரவி கூரை வீடு எரிந்தது. 
தகவலறிந்து வந்த அரியலூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த உடைமைகள், பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும், விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com