அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியைக் காட்டி மிரட்டிய லாட்டரி வியாபாரியை ஜயங்கொண்டம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் கச்சேரி சாலையில் வசித்து வருபவர் ராமதாஸ் மகன் சம்பத் (45), இவர் செவ்வாய்க்கிழமை காலை தா.பழூர் சாலையில் லாட்டரி சீட்டுவிற்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பத்தை பிடிக்க முயன்றபோது சம்பத் கத்தியை காட்டி மிரட்டினாராம். இதையடுத்து அவரை கைது செய்துலாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.