பொதுமக்களை திட்டியவர் கைது

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள கடம்பூர் கடைவீதியில் போக்குவரத்து இடையூராக நின்று கொண்டு,பொதுமக்களை தரக்குறைவாக இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் திட்டிக்கொண்டிருந்தார்.

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள கடம்பூர் கடைவீதியில் போக்குவரத்து இடையூராக நின்று கொண்டு,பொதுமக்களை தரக்குறைவாக இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் திட்டிக்கொண்டிருந்தார். தகவலறிந்த விக்கிரமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, அந்த இளைஞரை பிடித்தனர்.  விசாரணையில் அவர் குணமங்கலம், மதாகோயில் தெருவைச் சேர்ந்த பிரேம்குமார் (24) என்பது தெரியவந்தது.  இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com