அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம், பந்தநல்லூரை அடுத்த திருவம்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம் மகன் பன்னீர்செல்வம் (28).
இவர், வியாழக்கிழமை காலை அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு தா.பழூரில் இருந்து அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தா.பழூர் காவல் உதவி ஆய்வாளர் லட்சுமிபிரியா லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநர் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.