பொங்கல் திருநாளையொட்டி, அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பச்சரி,வெல்லம் கொண்டு பொங்கல் வைத்துக் கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு
நீதிபதி சுமதி, மாவட்ட மகிளா நீதிமன்றம் மற்றும் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முத்துகிருஷ்ணன், மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிபதி ரவி, சார்பு நீதிபதி சரவணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி சீனிவாசன்,
கூடுதல் உரிமையியல் நீதிபதி மாணிக்கம், குற்றவியல் நடுவர் மகாலட்சுமி, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜெயக்குமார், செயலர் மாரிமுத்து, பொருளாளர் கொளஞ்சி மற்றும் வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.