அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் அருகே மதுவை பதுக்கி விற்ற பெண் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம் போலீஸார் வியாழக்கிழமை இரவு ஸ்ரீபுரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அந்தப் பகுதியில் மதுபானத்தை பெண் ஒருவர் பதுக்கிவைத்து விற்றுக் கொண்டிருந்ததை கவனித்த போலீஸார்,அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ஸ்ரீபுரந்தான், காலனித்தெருவைச் சேர்ந்த சாந்தி (40) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.