அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா தலைமை வகித்தார். கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய
விதிமுறைகள், இந்த போட்டிக்கு எவ்வாறு அனுமதி பெறுவது, இணையதளம் மூலம் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் நஷீர் மற்றும் மேலமைக்கேல்பட்டி, சிங்கராயபுரம், கோக்குடி, புதுச்சாவடி ஆகிய கிராமங்களின் ஜல்லிக்கட்டு விழா ஒருங்கிணைப்பாளர்கள்,அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.