தா.பழூர் அருகே லாரி மோதி விவசாயி சாவு

அரியலூர் மாவட்டம் தா. பழூர்அருகே லாரி மோதி விவசாயி உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் தா. பழூர்அருகே லாரி மோதி விவசாயி உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகேயுள்ள காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்(35), விவசாயி.
இவர் சனிக்கிழமை காலை காரைக்குறிச்சிக்கு கடைவீதிக்கு சென்றுவிட்டு கும்பகோணம் ஜயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது கும்பகோணம் பகுதியில் இருந்து தா. பழூர் நோக்கி நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு லாரி மோதி உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த தா. பழூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின் பேரில் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் சிங்காரவடிவேலைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com