அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருமானூர் அருகேயுள்ள கண்டராதித்தம் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மூக்கன் (84), கோயில் பூசாரி. கடந்த 8 மாதங்களுக்கு முன் இவரது மனைவி இறந்துவிட்டார். மூக்கனுக்கு வாரிசு இல்லாததால் இவருக்குச் சொந்தமான 45 சென்ட் நிலம்,10 சென்ட் தோட்டம், ஒரு ஓட்டு வீடு ஆகியவற்றைக் கேட்டு உறவினர்கள் தகராறு செய்து வந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை மூக்கன் தனது வீட்டின் முன் தலையில் பலத்த காயத்துடன் இறந்துகிடந்தார்.
தகவலறிந்த அரியலூர் டிஎஸ்பி மோகன்தாஸ், திருமானூர் போலீஸார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் மோப்பநாய் டிப்சி கண்டராதித்தம் பேருந்து நிறுத்தம் வரை சென்று நின்று விட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.