அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருள்மிகு விசாலட்சுமி சமேத விசுவநாதர் கோயில் முன் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொங்கலை முன்னிட்டு சிறுவர் சிறுவர்களுக்கு சாக்கு ஓட்டம், ஓட்டப்பந்தயம், பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, மகளிருக்கு கோலப்போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் வென்றோருக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தா.பழூரை சேர்ந்த தொழிலதிபர் பாபு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கோயில் குருக்கள் ராமநாதன் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை செந்தில் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதேபோன்று தா.பழூரை சுற்றி பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.