அரியலூர்
மாணவர் காங். சேர்க்கை முகாம்
அரியலூரிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், இந்திய தேசிய மாணவர் காங்கிரஸ் அமைப்பின்(நேஷனல் ஸ்டூடண்ட்
அரியலூரிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், இந்திய தேசிய மாணவர் காங்கிரஸ் அமைப்பின்(நேஷனல் ஸ்டூடண்ட் யூனியன்) விளக்கக் கூட்டம் மற்றும் மாணவர்கள் சேர்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். இந்திய தேசிய மாணவர் காங்கிரஸ் அமைப்பின் தேசியச் செயலர் அபின் வர்க்கி,கேரள மாநிலச் செயலர் நிகில் ஆகியோர் பங்கேற்று,மாணவர் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பேசினர். இதைத் தொடர்ந்து அந்த அமைப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. கூட்த்தில் முன்னாள் நகரத் தலைவர் பழனிசாமி,வட்டாரத் தலைவர்கள் பாண்டியராஜன்,சீமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தித் தொடர்பாளர் மா.மு. சிவக்குமார் வரவேற்றார்.