ஜயங்கொண்டம் அருகே ஐடிஐ மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

ஜயங்கொண்டம் அருகே  ஐடிஐ மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.

ஜயங்கொண்டம் அருகே  ஐடிஐ மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஓலையூரைச் சேர்ந்த வெங்கடாசலம், மனைவியுடன் திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனியில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் சிவசக்தி(19) கீழப்பழுவூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் செய்முறை வகுப்பில் ஈடுபட்ட போது பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் பாட்டிலை சிவசக்தி உடைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.   
இதனைக் கண்டித்த கல்லூரி நிர்வாகம் அபராதத் தொகை செலுத்த கூறியதோடு, பெற்றோரை அழைத்து வர கூறியுள்ளது.  இதனால் கல்லூரிக்கு செல்லாமல் இருந்த சிவசக்தியை இரண்டு நாள்களாக காணவில்லை. பெற்றோரை பார்க்க திருப்பூர் சென்றிருக்கலாம் என அருகில் இருந்தவர்கள் நினைத்து சிவசக்தியை தேடவில்லை. 
இந்நிலையில், வெள்ளிகிழமை வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற ஆண்டிமடம் போலீஸார் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிவசக்தி தூக்கில் சடலமாக தொங்கிக்  கொண்டிருந்தார். 
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com