திருமானூர் அருகே முதியவர் தற்கொலை

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே விஷம் குடித்து மருத்தவமனையில் சிகிச்சை பெற்ற வந்த முதியவர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே விஷம் குடித்து மருத்தவமனையில் சிகிச்சை பெற்ற வந்த முதியவர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
திருமானூர் அருகேயுள்ள தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (63). விவசாய கூலித் தொழிலாளியான இவர் நோய்வாய்பட்டிருந்தார்.
இதல் மனமுடைந்த இவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை கடந்த 16 ஆம் தேதி குடித்துள்ளார்.அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com