தா.பழூர் அருகே பெண் சடலம் மீட்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடக்கரை ஓரத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. 

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடக்கரை ஓரத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. 
ஜயங்கொண்டம் அருகே உள்ள தா. பழுரை அடுத்த அடிக்காமலை கிராமம் அருகே கொள்ளிடக் கரை ஓரத்தில் திங்கள்கிழமை காலை அவ்வழியே சென்றவர்கள் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 
வெள்ளை நிற புடவை, சிவப்பு நிறத்தில் ஜாக்கெட் அணிந்திருந்த அந்தப் பெண்மணி குறித்து தா.பழுர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com